தம்புள்ளை- மாத்தளை வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 11 வயது சிறுவனொருவனே உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீபாத யாத்திரைக்கு சென்றவர்களை ஏற்றிக் கொண்டு தம்புள்ளையிலிருந்து சென்று கொண்டிருந்த பேருந்தும், கண்டியில் இருந்து மட்டக்களப்புக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்துமே மோதி விபத்திற்குள்ளாகின.
இந்நிலையில் படுகாயமடைந்த 7 பேர், மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.