திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வான் குடைசாய்ந்தது.
இவ்விபத்தில், வாகனத்தில் பயணஞ்செய்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹற்றன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி ஐஸ்கிறீம் வகைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு, அவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தை பெண் சாரதி ஒருவரே செலுத்தியுள்ளதாகவும், அவருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.