ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் தினேஷ் குணவர்தன

8 dinesh 4
8 dinesh 4

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார்.

இதன்போது கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகியவற்றிலிருந்து விலகுவதற்கான முடிவினை அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட முடியாது, மேலும் மக்களின் இறையாண்மையை மீறும் செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது, குறிப்பாக அமைச்சரவை அங்கீராம் வழங்கப்படவில்லை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை, முன்னாள் ஜனாதிபதியிடமும் இந்த விடயம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே கடந்த அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானம் 40/1 மற்றும் 30/1 மற்றும் 34/1 இல் இருந்து முறையாக விலக நாம் தீர்மானித்துள்ளோம் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் கூறினார்.