சுவிட்சர்லாந்தை தாக்கியது கொரோனா

6 jk
6 jk

இத்தாலி எல்லையிலிருக்கும் சுவிஸ் மாகாணமான டிசினோ மாகாணத்துக்குள் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டிசினோ மாகாணத்தில் வசிக்கும், தனது 70 வயதுகளிலிருக்கும் முதியவர் ஒருவர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இத்தாலியிலுள்ள மிலன் பகுதிக்கு சென்றிருக்கிறார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11ஐத் தொட்டுவிட்ட நிலையில், இத்தாலிக்கு சென்ற அந்த சுவிஸ் முதியவருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

தற்போது, அவர் லுகானோவிலுள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட இருப்பதோடு, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அடுத்த 14 நாட்களுக்கு கண்காணிக்கப்பட உள்ளார்கள்.

இதுவரை சுவிட்சர்லாந்தில் 300 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதன் பேரில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அந்த முதியவர் ஒருவர் தவிர வேறு யாருக்கும் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.