எல்லே விளையாட்டில் தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு சீருடை வழங்கல்!

01 6 1
01 6 1

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் எல்லே விளையாட்டில் தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை இல்லாத நிலையில் பிரதேச சபை உறுப்பினரிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ஜேர்மன் உதவும் இதய இதயங்கள் அமைப்பினரிடம் வேண்டுதலுக்கமைய ஜேர்மனின் வசிக்கும் தொழிலதிபர் எஸ்.மோகனின் அனுசரணையோடு மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

இம்முறை பாடசாலைகளுக்குடையில் நடைபெற்ற மாகாண மட்டத்தில் எல்லே விளையாட்டில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கே குறித்த சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அதிபர் வி.ஆதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூகசேவையாளருமான க.கமலநேசன், பழைய மாணவர் சங்க உறுப்பினர் ச.விஜிதரன், விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.