தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறை!

maxresdefault 620x330 1
maxresdefault 620x330 1

வவுனியா பிரதேச செயலகத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பொது அமைப்புக்களிற்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்த அரசாங்கத்திலும் ஊடகவியலாளர்கள் கடத்தல்களும், கைதுகளும் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளரும் அவருடைய மனைவியும் தற்போது விசாரணைக்கு அழைக்கபப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த யுத்த காலத்திலும் கூட 35க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செயயப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கடந்த நான்கரை வருடகாலமாக நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்திலும் கூட கடந்த அரசாங்கத்தினால் கொலைசெய்யப்பட்ட 35 ஊடகவியலாளர்களின் விசாரணைகள் நடைபெறவுமில்லை, நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களிற்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் இல்லை.

தொடர்ந்தும் அதே நிலைமைதான் நீடித்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே அரசாங்கம் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அவர்களை சுதந்திரமாக எழுதுவதற்கும் பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் தெரிவித்த போதிலும், ஊடகவியாலாளர்கள் மீதான கைதுகளும் விசாரணைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதை இனியும் அனுமதிக்க முடியாது.

ஆகவே ஊடகவியாலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.