இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
தற்போதுவரை 60 நாடுகளுக்குள் கொரோனா தாக்கம் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனாவிற்கு ஒருவர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, .
இந்த நிலையில், இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆரம்பந்தில் கேரளாவில் கொரோனா தாக்கத்திற்கு இலக்கான மாணவியை மருத்துவர்கள் குணப்படுத்தியிருந்தனர் எனவும் மத்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.