முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் அலுவலகம் திறந்துவைப்பு !

IMG 0821
IMG 0821

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் அலுவலகம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றையயதினம் (02)திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் பதவி வகித்துவரும் நிலையில் அவருக்கான அலுவலகம் ஒன்று இல்லாத நிலை காணப்பட்டது.  
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடம் ஒன்று புனரமைக்கப்பட்டு திறந்து முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் திறந்து வைக்கப்படுள்ளது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் , ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கனகரத்தினம் ,மேலதிக மாவட்ட செயலாளர் கனகேஸ்வரன்  மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஜேசு ரெஜினோல்ட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.