கொரோனா வைரஸுக்கு இலக்கான முதலாவது இலங்கையர்

625.200.560.350.160.300.053.800.300.160.90
625.200.560.350.160.300.053.800.300.160.90

உலகையே ஆட்டிப்படைக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் முதன்முதலில் இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இத்தாலியில் உள்ள 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் . நோய் தாக்கத்திற்கு உள்ளான இலங்கையரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இத்தாலி நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் Brascia வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் , அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை எனவும், முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.