8 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்! 68 வயதான நபர் கைது.

unnamed 2
unnamed 2

எட்டு வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 68 வயதுடைய ஒருவரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் வீட்டுக்குச் சிறுமி சென்றிருந்த சந்தர்பத்தில் அச்சிறுமியை ஏமாற்றியே
சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தயுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பாெலிஸார் கூறினர்.
இது தொடர்பில் சிறுமி தனது தாயிடம் கூறியதையடுத்து தாய் தங்கொட்டுவ பாெலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கபட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள தங்கொட்டுவ பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.