தமிழ்நாட்டு அரசின் வழக்கை விசாரிக்க தடைகோரிய சீமானின் மனு நிராகரிப்பு!

images 1 1
images 1 1

தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் நேரில் முன்னிலையாவதில் விலக்கு அளிக்கக் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்திருந்தது. குறித்த வழக்கை ரத்து செய்யவும், சீமான் முன்னிலையாவதற்கு விலக்களிக்கவும் மறுப்புத் தெரிவித்த நீதிபதி மனு குறித்த பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச்-23 ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.