நாடாளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் இன்று தாம் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்
பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
எனினும், இந்தத் தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிரானது என சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
“இது ஒரு துரதிர்ஷ்டவசமான தீர்மானம். இந்தத் தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒரு சிலருடையது” எனவும் சஜித் அணியினர் விசனம் தெரிவித்துள்ளனர்.