முதல் ஒருநாள் போட்டி: மழையால் ரத்து

1 M 1
1 M 1

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோத இருந்த முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக நேற்று கைவிடப்பட்டது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் நடக்க இருந்தது.

காயத்தில் இருந்து மீண்ட துவக்க வீரர் ஷிகர் தவான் சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா , வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் என மூவரும் இந்திய அணிக்கு திரும்பி இருந்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதும், போட்டியை காண ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். ஆனால் முதல் நாள் மாலையில் இருந்து இங்கு பலத்த மழை கொட்டியது. இது இன்றும் தொடர்ந்தது. மழை காரணமாக மைதானம் முழுவதும் தார்ப்பாயினால் மூடப்பட்டது.