கொரோனாவால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு

2 sd
2 sd

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ள நிலையில், டெல்லியை சேர்ந்த பெண் நேற்றிரவு உயிரிழந்தார்.

இதன் மூலம் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உபி, பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்கள் முடங்கி உள்ளன.

திருப்பதி கோயிலில் பக்தர்கள் பரிசோதனைக்குப் பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது. இதுவரை நாடு முழுவதும் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனாவுக்கு முதல் பலியாகி இருப்பது மேலும் பீதியை அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பல மாநிலங்கள் நேற்று முதல் தீவிரப்படுத்தி உள்ளன.