ரஜினியை பாராட்டும் லாரன்ஸ்!

i3 1 5
i3 1 5

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் மக்களிடம் அரசியல் எழுச்சி வந்ததும், தான் அரசியலுக்கு வருகிறேன் என பேசினார். இதற்கு ஒரு தரப்பில் ஆதரவும், இன்னொரு தரப்பில் எதிர்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநர் ராகவா லாரன்ஸ், ரஜினியின் கருத்து குறித்து லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில், சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை என்ற பெயரில் பதிவிட்டிருக்கிறார்.

சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொல் புதிது!
சோதி மிக்க நவகவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது
என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!
இவை – அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது!
இதைப் புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரைத் திட்டுபவர்கள் கூட,
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள்!
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதைப் புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமானுக்கும் நன்றி!
நம் அண்ணன் ரஜினியின் எண்ணங்கள் நிறைவேற, நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.