துல்கர் படத்தை துவக்கி வைத்த மணிரத்னம்

i3 4 5
i3 4 5

நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராகி விட்டார் அவர் இயக்கும் படத்திற்கு ஹேய் சினாமிகா என்று பெயர் வைத்திருக்கிறார்.

தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் , அதிதிராவ், காஜல் அகர்வால் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மணிரத்னம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சுஹாசினி மணிரத்னம், மற்றும் குஷ்பு ஆகியோர் கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.

கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜியோ ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.