வவுனியாவில் இன்று பலத்த பாதுகாப்பு நடைமுறை

20200319 141834
20200319 141834

வவுனியாவில் இன்று பலத்த பாதுகாப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு, ஆகியோரின் தலைமையின் கீழ் விஷேட அதிரடிப்படையினர் பொலிசாருடன் இணைந்து வீதி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டதுடன் 320 பொலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தினை சூழவுள்ள பகுதிகள் கண்காணிப்பு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான வீதிகள் ஐந்து தடை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பாதுகாப்பு இன்று காலை ஐந்து மணிமுதல் மாலை ஐந்து மணிவரையும் மேற்கொள்ளவுள்ளதுடன் விஷேட அதிரடிப்படையினருடன் பொலிசார் இணைந்து வீதி ரோந்து நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவடையவுள்ளதை முன்னிட்டு இவ்வாறான பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.