கொரோனா தொற்றுடன் யாழ்ப்பாணத்தில் போதனை செய்த போதகர்

80 n
80 n

யாழ்ப்பாணம் செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் சிறப்பு வழிபாடு நடத்தியிருந்தார்.

அவர் கொரோனா வைரஸ் காய்ச்சலுடனேயே அன்று போதனையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது .

உடனடியாக நாடு திரும்பிய அவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.

இந்த வழிபாட்டில் 100 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது .

எனவே அவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து உடனடியாக மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும், வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் பற்றிய விபரம் தெரிந்தால் 0212217278 இலக்கத்திற்கு அழைத்து குறிப்பிடும்படியும் , தொடர்புகொள்ளும்படியும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார் .