எரிக்கவும் முடியாமல் வைத்திருக்கவும் முடியாமல் எங்கும் ஒரே சடலங்கள் !!

8 oo
8 oo

சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் இத்தாலியில் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.

காரணம் கொரோனா. இப்படி ஒரு பாதிப்பை உலகம் கண்டதில்லை. மொத்தம் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சுமார் 9 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஒட்டுமொத்த உலகிற்கும் பெரிய அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு கொரோனாவை அறிவித்து இருக்கிறது.

இன்னும் இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்கா, ஜப்பான் என்று பல நாடுகளில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தனித்தனியாக ஈடுபட்டு வருகிறார்கள்.