100 ஆக அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

2 fdf
2 fdf

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் புதிதாக மூவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், 229 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.