பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் பசில் கோரிக்கை

2 d
2 d

வீழ்ச்சியடைந்துள்ள தேசிய மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா வைரஸ் தாக்கத்தத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ளவும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் ‘உதேசா கம சுரகிமு’ செயற்திட்டம் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பூகோள பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள தேசிய மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .