இத்தாலியில் ஒரே நாளில் 627 போ் பலி!!

5 es 3
5 es 3

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 627 போ் நேற்று உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய இறப்புக்களுடன் அங்கு கொரோனாவுக்கு இதுவரை பலியானவா்களின் எண்ணிக்கை 4,032 ஆக உயா்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்ட்டவா்களின் எண்ணிக்கை 47,021-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா வைரஸால் 1,500 க்கும் மேற்பட்ட இறப்புகள் இத்தாலியில் பதிவாகியுள்ளன.

வுஹானின் ஹூபே மாகாணத்த்தில் கொரோனா வைரஸ் தொற்று உச்சக் கட்டத்தில் இருந்ததை விட இத்தாலியின் தற்போதைய தினசரி உயிரிழப்புக்கள் அதிகமாகப் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.