கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.
அதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது 2021ஆம் ஆண்டுஆடி மாதம் 23ஆம் திகதி தொடங்கி ஆவணி 8ஆம் திகதி நிறைவடைகிறது.
பராலிம்பிக்ஸ் ஆவணி 23 தொடக்கம்புரட்டாதி மாதம் 2 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.