ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை – பொலிஸ் மீண்டும் எச்சரிக்கை

images
images

அங்கீகாரம் வழங்கப்பட்டவா்களைத் தவிர ஊரடங்கு சட்ட உத்தரவை மீறி வீதிகளில் இறங்குவோர் கைதுசெய்யப்பட்டு அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதான வீதிகளிலே அல்லது உள் வீதிகளிலோ எவரும் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவை மீறி வீதிகளில் இறங்குவோர் கைதுசெய்யப்பட்டால் அவா்களுக்குப் பொலிஸ் பிணை வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.