ஆயிரம் கோடி ரூபா பெறுமதியுடைய போதைப்பொருளை மீட்டது கடற்படை

6 ad
6 ad

இலங்கையின் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 10 ஆயிரம் மில்லியன் (ஆயிரம் கோடி) ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது 500 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மற்றும் 500 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.