கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது!

6 hgg
6 hgg

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் கஞ்சாவுடன் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக் காரணமாக  நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  எனினும் நேற்று கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்ப்பட்டது.

இதன்போதே குறித்த நபர்கள் கஞ்சாவுடன் சென்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

300 கிராம் கஞ்சா அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.  

கைதுசெய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, கல்மடு,  இராமநாதபுரத்தைச்சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்  தர்மபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.