யாழ். பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பதாக உறுதி செய்யயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேலும் இருவருக்கு தற்போது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக அரசாங்கத்தினது அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் எனவும் யாழ். போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இது வரையில், 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.