இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களில் மற்றுமொருவர் கொழும்பில் இரவு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையை சேர்ந்த 74 வயதுடைய பீ.எச்.எம்.ஜுனுஸ் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவருடன் சேர்த்து இலங்கையில் இதுவரை 3 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.