கொழும்பு – தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நபரது மனைவி மற்றும் மருமகனும் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் அவர்கள் மூவரும் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொது சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவு தெரிவிக்கின்றது.
நெதிமால, றப்பர்வத்த – அருணாலோக்க மாவத்தையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி வழிகாட்டி ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்தும் அதனை மறைத்த நிலையில், களுபோவில மருத்துவமனையில் வைத்து அவர் ஐ.டி.எச். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதனையடுத்து தற்போது குறித்த மூவரும் சந்தித்த மற்றும் பயணம் செய்த பகுதிகளைச் சேர்ந்த நபர்களை சுயதனிமைப்படுத்தலை செய்யும்படி அறிவுறுத்தியிருப்பதாக தெஹிவளை சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த இருவரை குறித்த நபர் தனது இல்லத்தில் தங்கவைத்திருந்ததும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.