ஒரு பிரிவினர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

1 1
1 1

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் ஒரு பிரிவினர் இன்று அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதற்கமைய சுமார் 195 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த வெளிநாட்டவர் உள்ளிட்ட 100 பேர் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதுவரை 2121 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் மேலும் 1500 பேர் குறித்த நிலையங்களில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.