1.7 மில்லியன் பிரித்தானியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் -பொரிஸ் ஜோன்ஸன்

download 7
download 7

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பிரித்தானிய மரணங்கள் 2352 ஆக உயர்ந்த நிலையில் 1.7 மில்லியன் பிரித்தானியர்கள் கொரோனா வைரஸினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் கொவிட்-19 தாக்கத்தினால் ஒரேநாளில் மேலும் 563 பேர் பலியாகியதனை அடுத்து. இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பங்குனி 18 முதல், மொத்தம் 1,496,651 பேர் கொவிட் -19 குறித்த அறிகுறிகளை மட்டுமே பதிவு செய்தனர், அதே நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனில் கால் பகுதியினர் 111 மற்றும் 999 அழைப்புகள் மூலம் தெரிவித்த அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் மதிப்பிடப்பட்டனர். முன்னதாக, பங்குனி 31 மாலை 4 மணி நிலவரப்படி இறப்புகள் 563 அதிகரித்து மொத்தம் 2,352 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“இது ஒரு சோகமான, நாளாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை” எனபிரதமர் ஜான்சன் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ செய்தியில் குறிப்பட்டள்ளார்.

இதேவேளை வணிகச் செயலாளர் அலோக் சர்மா, மக்கள் தொடர்ந்து அரசாங்க வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கோரியுள்ளார். “நாங்கள் ஏன் இந்த கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம் என்பதை நாடு முழுவதும் மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் மிகவும் முக்கியமானது என்னவென்றால், இவற்றை மிக விரைவாக நிறுத்திவிட்டால், நாடு முழுவதும் மக்கள் மேற்கொண்ட பாரிய முயற்சிகள் வீணடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது, மேலும் ஆபத்தான இரண்டாவது உச்சத்தை நாம் காணக்கூடும். அதனால் அரசாங்க வழிகாட்டுதல்களை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் தற்போதைய சூழல் குறித்து தாம் மதிப்பாய்வு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.