ஆறு வாரங்களேயான குழந்தையை பலிவாங்கிய கொரோனா !

corona2
corona2

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.

மேற்படி குழந்தை, கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, நேற்று (01) வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து, குழந்தைக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அந்த தகவலை அம்மாநில ஆளுநர் நெட் லமொண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் கவலையுடன் வெளியிட்டுள்ளார்.

மேலும், பிறந்து 6 வாரங்களேயான குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.