‘கொரோனா’ குறித்து போலித் தகவல்: பல்கலை மாணவர் உட்பட ஐவர் கைது

4 ere
4 ere

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலித் தகவல்களைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட 5 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக மாணவர், பேரதெனிய பல்கலைக்கழகத்தின் இறுதி வருட மாணவர் எனவும், இராணுவப் பல்கலைக்கழகம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என சமூக வலைத்தளத்தில் போலித் தகவலை அவர் பரப்பினார் எனவும் பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.