151 பேருக்கு கொரோனா

2 s
2 s

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமையத் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 148 இலிருந்து 151 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய 127 நோயாளர்களும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 33 நோயாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 25 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 24 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 11 பேரும், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோர்களில் வெளிநாட்டவர்களும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.