கொரோனா வைரஸ் தொடர்பில் அவசர சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோரியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க, இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இதனை நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மாநாட்டின்போது வலியுறுத்தினர்.
அவசியமான நாடாளுமன்ற சட்டவரையறை இன்றி அரசாங்கத்துக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது என்று ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
இன்று நாட்டுக்கு தேவை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விடயம் மாத்திரமே என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை நிறைவேற்றியுள்ளதையும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.