துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயம்!

1 sho
1 sho

பாணந்துறை பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பாணந்துறை, எகொட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீதே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அனுமதியின்றி பயணித்துள்ளனர்.