குணம்குறிகளற்றும் கொரோனா காணப்படும்!: மருத்துவர் சத்தியமூர்த்தி

sathiyamoorthi tk
sathiyamoorthi tk

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, குணம்குறிகளற்ற நிலையிலும் காணப்படலாம் என்று யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 20பேரில் பத்துப் பேருக்கு மேற்கொண்ட பரிசோனைகளின் போது மூவருக்கு குணம் குறிகளற்ற நிலையில் கெரானா தொற்று காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுமக்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் சமூக இடைவெளியை பேணி இந்த நோய் தொற்றை தடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் கொரோனா தொற்று குணம் குறிகள் காணப்படுகின்ற பொதுமக்கள், தயக்கமின்றி முன்வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக பரிசோதனைகளை மேற்கொண்டு நோயின்றி வீடு திரும்புபவர்களைக் கண்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.