வேல்ஸ் நகரில் சுதந்திரமாக சுற்றும் செம்மறியாடுகள்!

05
05

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், லாண்டுட்னோ பகுதியில் செம்மறி ஆடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

லாண்டுட்னோ வழியாக செம்மறி ஆடுகள் சுற்றி த் திரிகின்றன. அங்குள்ள சாலைகளில் சுதந்திரமாக வலம் வருகின்றன. இவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், செம்மறி ஆடுகள் சுதந்திரமாக வலம் வருகின்றன.