இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்

8
8

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பலரின் உயிரை சூரையாடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தொற்றை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச நடனம் சொல்லி கொடுக்க தயாராகி உள்ளார். இதற்காக பிரத்யேகமான இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் 2 இலவச நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் மாதம் முழுவதும் இலவச நடன பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாதுரி தீட்சித் கூறுகையில் “இப்போது அனைவரும் கஷ்டமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஊரடங்கு தவிர்க்க முடியாதது. இந்த நேரத்தில் எனது குழுவினர் மூலம் நடன பயிற்சி அளிக்கிறேன். ஏப்ரல் 30- வரை இந்த பயிற்சி அளிக்கப்படும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்றார்.