சமுர்த்தி தொடர்பான வேண்டுகோள் – கே.காதர் மஸ்தான்

unnamed 1 16
unnamed 1 16

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தங்களது கிராம உத்தியோகத்தரையோ அல்லது சமூர்த்தி உத்தியோகத்தரையோ சந்தித்து புதிய சமூர்த்தி குடும்பங்களாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து சமுர்த்தி பயனாளிகளுக்கும் பல்வேறு உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

அதன் அடிப்படையில் சமுர்தி கிடைக்கப்பெறாத, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தங்களது கிராம உத்தியோகத்தரையோ அல்லது சமூர்த்தி உத்தியோகத்தரையோ சந்தித்து புதிய சமூர்த்தி குடும்பங்களாக தங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

இதன் மூலம், அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.