உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதோடு, அங்கு 76 ஆயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் துணி முகக்கவசங்கள் அல்லது பாதுகாப்பு முகக்கவசங்களை அணியுமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலைியில், கனடாவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் என் 95 ரக முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.