வவுனியாவில் ஊரடங்கை மீறிய 16 பேர் கைது

Vavuniya town
Vavuniya town

வவுனியாவில் நேற்றைய தினம்ஊரடங்கு உத்தரவை மீறியதாக 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வவுனியா மாவட்டமும் முற்றாக முடங்கியுள்ளது.

இந்நிலையில், மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியவசியத் தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரைத் தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா பொலிஸாரால் 16 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களில் 15 பேர் எச்சரிக்கை செய்யப்பட்டபின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் அவசியமின்றி வீதிகளில் திரிந்த 30இற்கும் மேற்பட்டவர்கள் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தியவசியச் சேவைகளை மேற்கொள்வோருக்கு வீதிகளில் நடமாடுவதற்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.