கொரோனா தொற்றுள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது

201512180154 new
201512180154 new

களுத்துறை – நாகொட வைத்தியசாலையில், இன்று(சனிக்கிழமை) கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி குழந்தையினை பிரசவித்துள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் பேருவளை – பன்னில பகுதியை சேர்ந்தவர் என்றும் தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் தாதியர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் கிளினிக் அட்டையை பார்த்தபோது, குறித்த பெண் பேருவளை – பன்னில பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த சிசுவின் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன், தாயையும் சிசுவையும் தனிமைப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனையடுத்து, பேருவளையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.