மட்டக்களப்பு, வவுணதீவு-கொத்தியாபுலை பள்ளியடி கிராமத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் 21 வயதுமதிக்கத்தக்க திசவீரசிங்கம் பவிப்பிரியா என்ற யுவதியும், கந்தசாமி இளங்கோ என்ற திருமணமான நபருமே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.