இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு

4 es 1
4 es 1

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.

இன்று புதிதாக 7 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இன்றும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ஐவரும் ஆண்களாவர். அதேவேளை, 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் இன்று மட்டும் மூவர் வீடு திரும்பியுள்ளனர்.

ஏனைய 134 பேரும் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே 273 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர் எனவும்  சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது