குருநாகலில் மேலும் 86 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு!

3 s
3 s

குருநாகல் மாவட்டம், கெகுணகொல்ல பகுதியில் 86 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கெகுணகொல்ல பகுதியில் கடந்த முதலாம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், கெகுணகொல்ல பகுதியில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பொது சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், இவர்களில் சிலர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத நிலையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்தும் இவர்கள் பின்பற்றாத பட்சத்தில் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்ப நேரிடும் என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.