பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி முன்னாள் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சபா.ரவீந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
நீண்டகாலமாக உடல் நலப் பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
தற்போதைய சூழலில் இறுதிச்கிரியை நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள, மக்களோ பங்கெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
அவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.