தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசு

1 vl
1 vl

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிசு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்ட பகுதியில் பிரதான வீதிக்கு அருகாமையிலேயே இவ்வாறு சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் முழுமையாக சிதைவடைந்திருந்ததால் குழந்தையின் உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது. குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.