கைது செய்ய வந்த பொலிசார் மீது எச்சில் துப்பிய பெண்!

625.500.560.350.160.300.053.800.748.160.70
625.500.560.350.160.300.053.800.748.160.70

கனடாவில் தன்னைக் கைது செய்யவந்த பொலிசார் மீது எச்சில் துப்பிய பெண் ஒருவர் , தனக்கு கொரோனா இருக்கிறது என்று கூறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒட்டாவாவிலுள்ள ஒருவர், தன் வீட்டுக்குள் ஒரு பெண் அத்து மீறி நுழைந்ததாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அந்த பெண் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த பொலிசார், அவரை கைது செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது அந்த பெண் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி பொலிசார் மீது எச்சில் துப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது, பொலிசாரை தாக்கியது முதல் கைது செய்வதை எதிர்ப்பது வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த பெண்ணுக்கு உண்மையிலேயே கொரோனா உள்ளதா இல்லையா என்பது குறித்து பொலிசார் எதுவும் சொல்லவில்லை.