எதிர்கட்சி தலைவர் சஜித் : ஜனாதிபதி கோட்டாபய விசேட கலந்துரையாடல்

download 12
download 12

முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடல் தற்பொழுது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் பங்கேற்றிருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினை அழிப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பொருளாதார தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவம் பொறுப்பாளர் ஆவார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளாரை்.